சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார்.
அண்ணாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் மக்கள் சேவையை நினைவுகூர்ந்து போற்றுவதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய அண்ணா, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேடைப் பேச்சு மற்றும் எழுத்தாற்றல் மூலம் மக்களின் மனதில் இடம்பிடித்த அண்ணா, அவர்களின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்றதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக, அப்போதைய மதராஸ் மாநிலத்துக்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டியதுடன், மாநில சுயாட்சிக்கு வித்திட்டவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் அண்ணா தனி முத்திரை பதித்ததாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
அண்ணாவின் ‘கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு’, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ உள்ளிட்ட உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூகநீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எங்கும் தழைத்தோங்கவும், தமிழின் பெருமையை காத்திடவும் இந்த நாளில் உறுதியேற்போம் எனவும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
