No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 68


    பலன்: நிலம், வீடு போன்ற செல்வங்கள் கிடைக்கும்

    பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர் விசும்பும்
    ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
    சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
    சாரும் தவம் உடையார் அடையாத தனம் இல்லையே

    பொருள்:

    பார் - நிலம்
    புனல் - நீர்
    கனல் - நெருப்பு
    வெங்கால் - காற்று
    படர் விசும்பு - பரந்த ஆகாயம்

    ஊரும் முருகு - தொடு உணர்வு
    சுவை
    ஒளி - வெளிச்சம்
    ஊறு - வாசனை
    ஒலி - சத்தம்

    5 பூதங்களாகவும்  - அவற்றை சார்ந்த 5 உணர்வுகளாகவும் (சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்) இருக்கக்கூடியவள் அன்னை அபிராமி. அவளின் சிறந்த திருவடிகளை சேர்பவர்கள் அடையக்கூடிய தவம் சிறந்த தவமாகும்.
    அவர்களால் பெற இயலாத செல்வம் ஏதும் இல்லை. அதாவது எல்லா செல்வங்களையும் பெறுவார்கள்.

    பாடல் (ராகம் - ஹம்சநாதம், தாளம் - ஆதி) கேட்க

    Previous Next

    نموذج الاتصال