No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 69


    பலன்: சகல சௌபாக்யங்களையும் பெறலாம்

    தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

    பொருள்:
    67-வது பாடலில், அன்னையை நினைக்காமல் இருப்போர் படும் துன்பத்தை, பட்டர் கூறினார். இங்கே, அம்பாளின் கடைக்கண்கள் தரக்கூடிய நன்மைகளை கூறுகிறார்.

    கார்மேகம் போல், கருமையான, கனமான கூந்தலினை கொண்ட அபிராமி அம்மையின் கடைக்கண்கள், அன்னையின் மேல் அன்பு கொண்டவர்களுக்கு:
    1. தனம் - செல்வம்
    2. கல்வி - அறிவு
    3. ஒரு நாளும் தளர்வறியா மனம் - தைரியமான மனம்
    4. தெய்வ வடிவம் - தெய்வீகமான அழகு ததும்பும் வடிவம் (ஸாரூப்யம் என்று ஒருவகை முக்தி)
    5. நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் - வஞ்சனை இல்லா உறவினர்கள்
    6. நல்லன எல்லாம் - நல்லவை அனைத்தும்

    ஆகிய 6 செல்வங்களையும் தரும்.

    பாடல் (ராகம்-பௌளி, தாளம் - ஆதி) கேட்க

    Previous Next

    نموذج الاتصال