No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 67


    பலன்: பகையுணர்வு அழியும்

    தோத்திரம் செய்து தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
    மாத்திரைப் போதும் மனதில் வையாதவர், வண்மை, குலம்,
    கோத்திரம், கல்வி, குணம் குன்றி நாளும் குடில்கள் தோறும்
    பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாய் நிற்பார், பாரெங்குமே

    பொருள்:

    அன்னை அபிராமியை தொழுது, அவள் புகழ் பாடாது, ஒரு மாத்திரைப் பொழுது கூட அவளின் மின்னல் போன்ற பிரகாசமான தோற்றத்தை மனதில் நினைக்காதவர் அடையும் கதி என்ன?

    1. வள்ளல் குணம் - வண்மை
    2. குலம் - பிள்ளைகள்
    3. கோத்திரம் - சந்ததி
    4. கல்வி - அறிவு
    5. குணம் - நற்குணங்கள்

    ஆகியவற்றில் குறைவடைந்து, பாரெங்கும் திரிந்து வீடு வீடாக சென்று பாத்திரம் ஏந்தி பிச்சை எடுப்பார். தரித்ரத்தினால் பீடிக்கப்பட்டு துன்புறுவர்.

    இந்த குணங்களுக்கு ஏற்றாற்போல், லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் நாமங்கள்:

    குலம், கோத்திரம் - குலயோகினி, குல ரூபிணி, குலாங்கனா
    கல்வி - ப்ரக்ஞான கணரூபிணி, ஞான விக்ரஹா, ஞான சக்தி, சிவ ஞான ப்ரதாயினி, சத்ய ஞான ஆனந்த ரூபா, விக்ஞான கலனா, ஞான முத்ரா, ஞான கம்யா, ஞானக்ஞேய ஸ்வரூபிணி,
    குணம் - ஷாட்குண்ய பரிபூரிதா, குண நிதி, த்ரிகுணாத்மிகா

    பாடல் (ராகம்-ஹம்சநாதம், தாளம் - ஆதி)  கேட்க

    Previous Next

    نموذج الاتصال