No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 66


    பலன்: கவி பாடும் திறன் பெறுவோம்


    வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடி செய் 
    பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன், பசும் பொன் பொருப்பு 
    வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய், வினையேன் தொடுத்த 
    சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே 

    பொருள்: 

    அன்னையே, எதையும் அறியாதவன் நான். மிக சிறியவன். உன் மலர் பாதத்தின் துணை தவிர வேறெதிலும் பற்றில்லாதவன். பொன்னால் ஆன மலையினை வில்லாக ஏந்திய சிவபெருமானுடன் வீற்றிருப்பவளே, வினைகள் பல செய்தவனான நான் உன்னை போற்றி பாடிய பாடல்களில் சொல் குற்றம் ஏதும் இருந்தால் அதை நீ பொருத்தருள வேண்டும். ஏனென்றால் அவை உன் மீது செய்யப்பட்ட தோத்திரங்கள் ஆகும்.

    இவ்வாறு பட்டர் வேண்டுகிறார். அடியேனும் அப்படியே வேண்டுகிறேன்!

    பாடல் (ராகம் - கன்னட கௌளை, தாளம் - ஆதி) கேட்க
    Previous Next

    نموذج الاتصال