ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்

இந்த தேவியானவள் சகல அணிமணிகளும் அணிந்து சுகாசனத்தில் உட்கார்ந்து, ஒளிரும் பேரழகுடன், தனது எட்டு கைகளிலும் சட்டரம், அம்பு, நிறைகுடம், வெற்றிலை, சங்கு, தாமரை, வில் ஆகிய இவைகளை ஏந்தி அடியார்களுக்கு அருளை வழங்குகிறாள்.

தியான சுலோகம்:-

கிரீட மகுடோ பேதாம்
         ஸ்வர்ண வர்ண சமந்விதாம்
சர்வாபரண சம்யுக்தாம்
         சுகாசந சமந்விதாம்
பரிபூர்ணஞ்ச கும்பஞ்ச
         தக்ஷிணேன கரேணது
சக்ரம் பாணஞ்ச தாம்பூலம்
         ததா வாம கரேணது
சங்கம் பத்வஞ்ச சாபஞ்ச
         கண்டி காமபி தாரிணீம்
சத்கஞ்சுக ஸ்தநீம் த்யாயேத்
         தன லக்ஷ்மீம் மநோஹரம்.


பலன்கள்:-

இந்த சுலோகத்தை தினமும் 108 முறை சொல்லி வழிபட்டால், நல்ல வழியாகிய தர்மநெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீதனலட்சுமி அருள்புரிவாள்.
Previous Next

نموذج الاتصال