ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்

ஸ்ரீ சந்தானலட்சுமி தேவி தனது கரங்களில் பூரண கும்பமும் கங்கணமும் அபய முத்திரையும் உடையவள். தன் மடியில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்து, இருபுறமும் தீபமும் சாமரமும் ஏந்திய பெண்களால் வணங்கப்படுகிறாள்.

தியான சுலோகம்:-

ஜடாமகுட சம்யுக்தாம்
         ஸ்த்தி தாசந சமந்விதாம்
அபயம் கடகஞ் சைவ
         பூர்ணகும்பம் புஜத்வயே
கஞ்சுகம் ச்சந்த வீரஞ்ச
         மெளக்திகம் சாபிதாரீணீம்
தீபசாமர நாரீபி:சேவிதாம்
         பார்ச்வ யோர்த்வயோ
பாலே சேநாநி சங்காசே
         கருணாபூரி தாநநாம்
மஹாராஞ் ஞீஞ்ச சந்தான
         லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே


பலன்கள்:-

மேற்கூறிய சுலோகத்தை தினசரி 108 முறை உச்சரித்து வந்தால் நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும் அளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ரதோஷத்தையும் ஸ்ரீசந்தான லட்சுமி நீக்கி அருள்புரிவாள்.
Previous Next

نموذج الاتصال