திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்

 சென்னை: திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டு வரும் சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீண்டகாலமாக அந்த முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும், வழக்குகள் முடிவடைந்தவர்கள் மற்றும் சட்டரீதியான தடைகள் இல்லாதவர்களின் நிலையை விரைந்து பரிசீலித்து, அவர்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு மனிதநேய அடிப்படையில் தீர்வு காண வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


Previous Next

نموذج الاتصال