சென்னை: தமிழகத்தில் மின்கட்டண உயர்வு மக்களிடம் கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என்பதால், அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள், நடுத்தர குடும்பங்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் கடும் நெருக்கடியில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் மின்கட்டணத்தை உயர்த்துவது மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிக்கும் என்றும், மின்கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின்வாரியத்தின் நிதிநிலையை மேம்படுத்த மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும் என்றும், பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தினார்.