வைத்திலிங்கம் வழக்கில் கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

 

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள லஞ்ச வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கட்டிடத் திட்ட அனுமதி வழங்குவதற்காக ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக வைத்திலிங்கம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. வழக்கின் ஆவணங்கள் மற்றும் தரப்பினரின் வாதங்களை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கில் மேலும் விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டது.


இதையடுத்து, வழக்கில் கூடுதல் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கு தொடர்பாக அறப்போர் இயக்கம் மற்றும் அமலாக்கத்துறையும் தங்களது தரப்பில் மனுக்களை தாக்கல் செய்து எதிர்ப்புகளை முன்வைத்திருந்தன. அவற்றையும் பரிசீலித்த நீதிமன்றம், வழக்கின் அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆய்வு செய்து விசாரணையை தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.


கூடுதல் விசாரணையின் அடிப்படையில் சேகரிக்கப்படும் ஆதாரங்கள் மற்றும் விசாரணை அறிக்கையை கருத்தில் கொண்டு, வழக்கின் அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Next

نموذج الاتصال