புதுடெல்லி: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிசக்தி ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் ஜிந்த் ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார். முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் ரயில், தமிழகத்தின் சென்னை பெரம்பூர் (Perambur, Chennai) ஐசிஎஃப் (ICF) ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது என்பது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்த ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபட் இடையே இயக்கப்பட உள்ளது. மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 2,600 பயணிகள் வரை பயணம் செய்யலாம். ஹைட்ரஜன் எரிசக்தி, மின்கலம் மற்றும் பேட்டரி தொழில்நுட்பம் இணைந்த சுற்றுச்சூழல் நட்பு ரயிலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
அதே நாளில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் நடைபெற்ற விழாவில், அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட 75 ரயில் நிலையங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் சென்னை பூங்கா, சின்னசேலம் மற்றும் குன்னூர் உள்ளிட்ட தமிழக ரயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் ₹26,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, உலகளவில் ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்திருப்பது பெருமைக்குரியது என்றும், கடந்த 12 ஆண்டுகளில் ரயில்வே துறையில் மின்மயமாக்கல், நிலைய மேம்பாடு மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
2023–24 மத்திய பட்ஜெட்டில் 35 ஹைட்ரஜன் ரயில்களை உள்நாட்டில் தயாரிக்க ₹2,300 கோடி ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆலையில் இந்த முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டது.
இந்த ரயிலின் குறைந்தபட்ச பயணக் கட்டணம் ₹5, அதிகபட்ச கட்டணம் ₹25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, குறைந்த மாசு வெளியீடு கொண்ட இந்த சேவைக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
TN Press TV
https://www.tnpress.in/
www.tamilnews.in
www.bhayamariyaan.com
X | Facebook | ShareChat | Dailyhunt: @Tnpresstv