ரூ.4.5 கோடி காசோலை மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை

 

சென்னை:


ரூ.4.5 கோடி மதிப்பிலான காசோலை மோசடி (Cheque Bounce) வழக்கில் நடிகர் விமலுக்கு சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.


'மன்னர் வகையறா' திரைப்படத்தின் தயாரிப்பிற்காக நடிகர் விமல், நிதியாளர் ஒருவரிடம் ரூ.4.5 கோடி கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்துவதற்காக வழங்கப்பட்ட காசோலை வங்கியில் போதிய இருப்புத் தொகை இல்லாததால் திரும்பியதைத் தொடர்ந்து, நிதியாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


வழக்கை விசாரித்த நீதிமன்றம், காசோலை மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கருதி, நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்ததுடன், காசோலையில் குறிப்பிடப்பட்ட தொகையையும் செலுத்த உத்தரவிட்டது.


அதே நேரத்தில், தீர்ப்பை மேல்முறையீடு செய்ய வசதியாக, சிறைத் தண்டனையை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைத்து நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது.


இந்த வழக்கின் தீர்ப்பு தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் விமல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Next

نموذج الاتصال