No results found

    விழுப்புரம் அருகே தடைசெய்யப்பட்ட 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


    விழுப்புரம் மாவட்டத்தில் போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு உரிய நடவடிக்கைகளை மாவட்ட எஸ்.பி சரவணன் மேற்கொண்டு வருகிறார்.

    இதனையடுத்து ஏ.எஸ்.பி. ரவீந்திர குமார் மேற்பார்வையில், வளவனூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் மற்றும் போலீசார் வளவனூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்று சோதனை செய்தனர்.

    இந்நிலையில் பகண்டை சாலையில் சகாய செல்வம் (வயது 34) என்பவரின் பெட்டிக்கடையை சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 24 பாக்கெட் ஹான்ஸ் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சகாய செல்வத்தை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் புதுச்சேரி மாநிலம் கொத்தம்புரி நத்தம் கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்பவரிடம் இருந்து வாங்கியதாக கொடுத்த தகவலின் பேரில் சிவகுமார் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் சுமார் 110 கிலோ எடை கொண்ட புகையிலை, குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து புகையிலை பொருட்கள், காரை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சகாய செல்வம், சிவக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    Previous Next

    نموذج الاتصال