No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 56


    பலன்: எல்லாவற்றையும் வசீகரிக்கும் திறன் பெறலாம்

    ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
    நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள், எந்தன் நெஞ்சினுள்ளே
    பொன்றாது நின்று புரிகின்றவா, இப்பொருள் அறிவார்
    அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.

    பொருள்:
    அன்னை அபிராமியிடமிருந்து தோன்றியதே இவ்வுலகமும் உயிர்களும். அவ்வாறு அவள் ஒருவளே. அனால் பலவாக பிரிந்து காணப்படுகிறாள். தோன்றிய பொருட்களிலிருந்தும் நீங்கி நிற்பாள். அடியார்களின் நெஞ்சினுள் நீங்காது இருந்து ஆட்சி புரிவாள். அவளை பற்றிய முழு உண்மையினை அறிந்தவர்கள் இருவரே - ஆலிலையில் துயின்ற கிருஷ்ணன் (விஷ்ணு) மற்றும் சிவன்.

    பாடல்(ராகம்-தர்பாரிகானடா, தாளம் - --விருத்தம் --) கேட்க

    Previous Next

    نموذج الاتصال