No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 50


    பலன்: அம்பிகை தரிசனம் கிடைக்கும்

    நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
    சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
    வாயகி, மாலினி, வாராஹி, சூலினி, மாதங்கி, என்று
    ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே

    பொருள்:

    அம்பாளை நேரில் காணவேண்டும் என்றால், அவள் நாமத்தை கூறவேண்டும். இதுவே கலியுகத்தில் சாலச்சிறந்தது. இதை உணர்த்தும் வகையில், ஸ்ரீ அபிராமி பட்டர், இந்த 50-வது பாடலில், அம்பாளின் நாமங்களை கூறியுள்ளார்.


    • நாயகி - அம்பாளே அனைத்திற்கும் தலைவி. லோகநாயகி, அகிலாண்டேஸ்வரி, ஜகதீஸ்வரி என்று அவளை வணங்குகிறோம்.
    • நான்முகி - நான்கு முகங்களை கொண்ட பிரம்மாவின் சக்தி. பிராம்மணி, ப்ராம்மி என்று சப்த கன்னிகைகளில் மூத்தவள் அம்பாளின் ஒரு வடிவம்.
    • நாராயணி - சங்கு. சக்ரம், கதை, கத்தி, வில் ஏந்திய, மகாவிஷ்ணுவின் சக்தி - வைஷ்ணவி.
    • கையில் 5 மலர்களை வைத்துள்ளவள் - (சம்பக அசோக புன்னாக சௌகந்திக லசத் கசா  - லலிதா சஹஸ்ரநாமம் )
    • சாம்பவி சம்பு - சிவனின் சக்தி 
    • சங்கரி - சங்கரனின் சக்தி  
    • சாமளை - ஷ்யாமளா தேவி 
    • சாதி நச்சு வாயகி - நஞ்சுடைய நாகத்தை தன் கையில் வைத்திருப்பவள் 
    • மாலினி - மலர், மணி மாலைகளை அணிந்தவள் 
    • வாராஹி - வராஹ மூர்த்தியின்  சக்தி. பூமியை காப்பாற்றிய வராஹ மூர்த்தியின் சக்தி - வாராஹி. இவளே தண்டினி, பஞ்சமி என்றெல்லாம் பெயர் பெற்றவள்.
    • சூலினி - சூலத்தை ஏந்திய மாஹேஸ்வரி என்னும் வடிவினள்.
    • மாதங்கி - மதங்க முனிவரின் பெண்ணாக அவதரித்தவள். ஞானமே வடிவானவள்.




    இவ்வாறு பல வடிவும், பெயர்களும் கொண்டவள் அன்னை அபிராமியே. அவளே ஆதி சக்தியும் ஆவாள். அவளது பாதங்களே, நமக்கு பாதுகாப்பு.

    பாடல் (ராகம் - நளினகாந்தி, தாளம் - --விருத்தம்--) கேட்க

    Previous Next

    نموذج الاتصال