No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 47


    பலன்: யோக நிலை அளிக்கும்

    வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர்
    வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம்
    ஏழும் பருவரை எட்டும், எட்டாமல் இரவு பகல்
    சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே

    பொருள்:
    இரவு பகல் சூழும் சுடர்கள் - சந்திர, சூரியர்கள்.

    உலகில் இரவும், பகலும் உருவாக காரணமாக இருக்கும் சூரியன், சந்திரன் இவைகளுக்கு நடுவே இருந்து பிரகாசிப்பவள் - அன்னை அபிராமி.

    வேலை நிலம் ஏழும் பருவரை எட்டும், எட்டாமல் -
    அவள், ஏழு நிலங்கள், எட்டு உயர்ந்த மலைகள் ஆகியவைக்கும் எட்டதவள்.

    ஆனால், மனத்தினால் ஒருவர் தியானித்தால் அவர்களுக்கு எளிதில் எட்டுபவள். அன்னையை வணங்குவதே வாழ்வதற்கு வழி.

    பாடல் (ராகம்: வசந்தா, தாளம் - ஆதி) கேட்க

    Previous Next

    نموذج الاتصال