பலன்: நல்ல நடத்தையோடு வாழ்வோம்
வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே, புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே
பொருள்:
விடத்தை உண்டதால், கருத்த நிறமான கழுத்தை உடைய நீலகண்டனின் இடப்பக்கத்தில் கலந்த பொன் போன்றவளே, தகாத செயல்களை அறிவிற் சிறியோர்கள் செய்தால், அதை ஞானிகள் பொறுத்து அருள்வது வழக்கமான ஒன்று. அது ஒன்றும் புதியது அல்ல. அதுபோல உன் அடியவனாகிய நான், உனக்கு விருப்பம் இல்லாத செயல்களில் ஈடுபட்டாலும், இறுதியில் உன்னை சரணடைந்தால், அதை மன்னித்து விடுவாய். அத்தோடு, உன்னை வாழ்த்தி பாடவும் வைப்பாய். என்னே உனது கருணை!
பாடல் (ராகம் - ரேவதி, தாளம் - -- விருத்தம் -- ) கேட்க
