No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 40


    பலன்: பூர்வ புண்ணியத்தின்  பலன் கிடைக்கும்

    வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
    பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
    காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும் அன்பு
    பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ - முன் செய் புண்ணியமே

    பொருள்:

    1. வாள் போன்று - மின்னும் நெற்றியை உடையவள் அன்னை அபிராமி.
    2. தேவர்களுக்கு, அன்னையான அவளை  வணங்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டுபண்ணக்கூடியவள். 
    3. அறியாமை உள்ள நெஞ்சத்திற்கு புலப்படாதவள். 
    4. என்றும் கன்னியானவள்.
    இப்படிப்பட்டவளை நான் வணங்குவதே பூர்வஜன்மத்தில் நான் செய்த புண்ணியம் என்கிறார் பட்டர்.

    சௌந்தர்ய லஹரி "சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி..." என்கிற முதல் ஸ்லோகத்தில், ஆதி சங்கரர்,

    சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும் 
    நசேத் ஏவம் தேவோ நகலு குசல ஸ்பந்திதும் அபி 
    அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதி பிரபி 
    ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்ய: ப்ரபவதி

     என்கிறார். 

    அதாவது புண்ணியம் செய்யாதவர்கள் உன்னை வணங்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரும் பூர்வத்தில் புண்ணியம் செய்ததால் தான் உன்னை (தேவியை) வணங்குகிறார்கள்.

    பாடல் (ராகம் - குறிஞ்சி, தாளம் - --- விருத்தம்---) கேட்க
    Previous Next

    نموذج الاتصال