No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 36


    பலன்: பழவினை வலிமை குறையும்

    பொருளே, பொருள்முடிக்கும் போகமே, அரும்போகம் செய்யும்
    மருளே மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
    இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உனது
    அருள் ஏது அறிகின்றிலேன், அம்புயா தனத்து அம்பிகையே.

    பொருள்:
    அம்புயா தனம் - குவிந்த ஸ்தனங்கள் அதாவது மார்பகங்கள்.
    குவிந்த ஸ்தனங்களை உடைய அம்பிகையே, நீயே பொருள், அதனால் கிடைக்கக்கூடிய போகம், அந்த போகத்தால் உண்டாகக்கூடிய மாயை, மாயையின் முடிவில் வரும் தெளிவு. எனது மனதில், வஞ்சகத்தினால் இருள் தோன்றாமல், வஞ்சனை அற்ற ஞான ஓளி பிறக்க வழிவகுத்தாய். உனது அருளினை பூரணமாக அறியமுடியாமல் தவிக்கின்றேன்.

    மகாகவி பாரதி,

    வஞ்சனை இன்றி, பகை இன்றி, சூதின்றி,
    வையக மாந்தரெல்லாம்,
    தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பெயர்
    சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!

    என்று பாடியுள்ளார்.

    அதாவது, சக்தி சக்தி சக்தி என்று மனிதர்கள் சொன்னால், வஞ்சனை, பகை, சூது போன்றவை இவ்வுலகை விட்டு போய்விடும். இது உறுதி என்று படும்படி, மூன்று முறை அறுதியிட்டு கூறுகிறார்.

    பாடல் (ராகம்-தன்யாசி, தாளம்---விருத்தம்---) கேட்க

    Previous Next

    نموذج الاتصال