பலன்: இம்மை, மறுமை இவைகளில் இன்பம் அளிக்கும்
சொல்லும் பொருளும் என, நடமாடும் துணைவருடன்
புல்லும், பரிமள பூங்கொடியே, நின் புது மலர் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்,
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே
பொருள்:
சொல்லையும் பொருளையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது. அதுபோல, சிவபெருமானோடு கூடி நடம் புரியும் அன்னையே, வாசம் வீசும் பூங்கொடி நீ. உன் பாதங்கள், அன்றலர்ந்த புது மலர்கள். இதனை இரவு பகல் பாராது யார் துதிக்கிறார்களோ, அவர்களுக்கு இப்பிறவி இன்பமாக அரச போகமும், இவ்வுலகை விட்டு நீங்கி முக்தி அடையும் வழியாக தவ நெறியும், பின் சிவலோகமும் கிடைக்கும்.
பாடல் (ராகம்: கானடா, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க
