No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 27


    பலன்: மனநோய் அகலும்

    உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
    படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
    அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால்
    துடைத்தனை, சுந்தரி நின் அருள் ஏதென்று சொல்லுவதே

    பொருள்:
    சுந்தரி - அழகி - அபிராமியே, உன் அருள் பெருமையை என்னவென்று சொல்வது?
    முதலில், வஞ்சகம், கோபம் போன்ற அழுக்குகள் நிறைந்த பிறவியை அறுத்தாய்.
    பின்னர் அன்பே ததும்பும் உள்ளம் கொடுத்தாய்.
    பின்னர் உன் பாத கமலங்களை வணங்கும் பணியினை எனக்கே அளித்தாய். எல்லாவற்றிற்கும் மேலாக, என் நெஞ்சத்தின் அழுக்கை உன் அருள் வெள்ளத்தினால் துடைத்தாய்.

    பாடல் (ராகம் - ரீதிகௌளை, தாளம் - மிஸ்ர சாபு) கேட்க

    Previous Next

    نموذج الاتصال