No results found

    அமித்ஷா பெயரை அவை குறிப்பில் நீக்க வலியுறுத்தி சட்டசபையில் இன்று பா.ஜனதா வெளிநடப்பு


    தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்துவதே உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் என்று பேசி இருந்தார். இது தொடர்பாக சட்டசபையில் இன்று நயினார் நாகேந்திரன் (பா.ஜனதா) பிரச்சினை எழுப்பினார். அமித்ஷாவின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார். அமித்ஷா என்று பெயர் சொல்லி கூறியிருக்கிறார். எனவே அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், "அதில் என்ன தவறு இருக்கிறது? அவருக்கு மரியாதை கொடுத்து திரு. அமித்ஷா என்றுதான் குறிப்பிட்டுள்ளார். இதில் எந்த தவறான வார்த்தையும் இல்லை. அவரை கிண்டல் செய்யவில்லை. கேலி செய்யவில்லை. எனவே அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது, இதை ஏன் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்? என்றார். இந்த பதிலில் திருப்தி அடையாத நயினார் நாகேந்திரனும் மற்ற 3 எம்.எல்.ஏ.க்களும் வெளியேறினார்கள். பின்னர் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறுகையில், "அமித்ஷா பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்காததால் வெளிநடப்பு செய்தோம்" என்றார்.

    Previous Next

    نموذج الاتصال