திருப்பதி: பெண்களின் பாதுகாப்பையும், பொருளாதார சுமையையும் கருத்தில் கொண்டு திருப்பதி நகரில் புதிய ஆட்டோ கட்டண சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெண்கள் ஆட்டோக்களில் பயணம் செய்ய ரூ.5 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை கட்டணத்தில் பெண்கள் நகரின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஆட்டோவில் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் மாணவிகள் அன்றாடப் பயணங்களில் எதிர்கொள்ளும் போக்குவரத்து செலவைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயண வசதி கிடைப்பதால், வேலைக்குச் செல்லும் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோருக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி நகரில் பெண்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
