மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்தது ஏன்? சீமான் கேள்வி

 தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளுக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக மின்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல குடும்பங்களுக்கு வழக்கமான தொகையை விட மூன்று முதல் நான்கு மடங்கு வரை மின்கட்டணம் விதிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


இந்த திடீர் கட்டண உயர்வுக்கான காரணத்தை தமிழக அரசு மற்றும் மின்வாரியம் பொதுமக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும் என்றும், மின் பயன்பாட்டுக் கணக்கீட்டில் அல்லது கட்டண நிர்ணயத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


மேலும், அதிகப்படியான மின்கட்டணத்தால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறிய அவர், பொதுமக்களின் குறைகளை உரிய முறையில் ஆய்வு செய்து, தேவையான நிவாரண நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


மின்கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு வெளிப்படையான விளக்கத்தை வழங்கி, பாதிக்கப்பட்ட நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Previous Next

نموذج الاتصال