புதுடெல்லி: டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கனமழையால் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் விமானங்களின் நிலவரத்தை சரிபார்த்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழையால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தொடர்ந்து விமான சேவைகள் தொடர்பாக அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
