லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமராக லேபர் கட்சித் தலைவர் ஆண்டி பர்ன்ஹாம் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த பின்னர், அரசு அமைக்க ஆண்டி பர்ன்ஹாமுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் பிரதமராக பதவியேற்று, புதிய அமைச்சரவையையும் அறிவித்தார்.
பதவியேற்ற பிறகு நாட்டுக்கு உரையாற்றிய ஆண்டி பர்ன்ஹாம், பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைச் செலவின நெருக்கடியை சமாளித்தல், வீடற்ற நிலையை ஒழித்தல் மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்துவது தனது அரசின் முக்கிய முன்னுரிமைகளாக இருக்கும் என்று தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் கியர் ஸ்டார்மரின் ராஜினாமாவைத் தொடர்ந்து இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. புதிய அரசின் கொள்கைகள் மற்றும் அமைச்சரவை நடவடிக்கைகள் மீது பிரிட்டன் முழுவதும் கவனம் திரும்பியுள்ளது.