பழனி கோயில் நிலப் பதிவு முறைகேடு: உயர்மட்ட விசாரணைக் குழு விசாரணை தொடக்கம்

 

பழனி: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் பதிவு முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணைக் குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.


நிலப் பதிவு நடைபெற்ற விதம், அதிகாரிகள் பின்பற்றிய நடைமுறைகள் மற்றும் விதிமீறல்கள் ஏதேனும் நடந்துள்ளனவா என்பது குறித்து குழு விரிவாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ஆவணங்கள், பதிவு விவரங்கள் மற்றும் அதிகாரிகளின் விளக்கங்களும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.


இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது ஏற்கனவே துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், முறைகேட்டில் தொடர்புடைய அனைவரின் பங்கையும் விசாரணைக் குழு ஆராயவுள்ளது.


விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தேவையான நிர்வாக மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Next

نموذج الاتصال