No results found

    அபிராமி அந்தாதி பாடல் - 38


    பலன்: வேண்டியவற்றை வேண்டியவாறு அருளும்

    பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
    தவளத் திருநகையும், துணையா, எங்கள் சங்கரனை
    துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
    அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

    பொருள்:
    அம்பாள் எப்படிப்பட்டவள் என்று இங்கு கூறுகிறார் பட்டர்.

    1. பவளம் போன்ற சிவந்த திருவாய் உடையவள்
    2. பனிமுறுவல் - குளிரூட்டும் இதமான சிரிப்பு உடையவள்
    3. இவ்வளவுதானா? இல்லை. ஒருவராலும் குலைக்கமுடியாத தவம் உடைய சிவபெருமானின் தவத்தினை களைத்தவள். எப்படி? தனது மெல்லிய இடை, மற்றும் உடுக்கை போன்ற முலைகளால். முன்பு பார்த்தவாறே, அம்பாளின் முலைகள் கருணை நிறைந்து பருத்து இருப்பதால், இடை நோகும்படி மெல்லியதாக உள்ளது. அதனால், மார்பகங்கள், இருபுறம் பருத்து, நடுவில் சிறிதாகி ஒரு உடுக்கை போல் இருக்கிறது என்று பாடுகிறார்.

    அம்பாளை பணிந்தால், தேவலோகத்தையும் நாம் ஆள முடியும்.

    பாடல் (ராகம் - ஆந்தோளிகா, தாளம் - ஆதி[திஸ்ர நடை]) கேட்க

    Previous Next

    نموذج الاتصال