அபிராமி அந்தாதி பாடல் - 32


பலன் - துர்மரணம் வராமல் இருக்கும்

ஆசைக்கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல் பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன், ஈசர் பாகத்து நேரிழையே.

பொருள்:
ஈசனின் ஒரு பாகத்தில் வீற்றிருக்கும் அன்னையே, நான் ஆசை என்னும் பெருங்கடலில் மாட்டிக்கொண்டு தத்தளித்துக் கொண்டிருந்தேன். கருணையற்ற எமனின் பாசக்கயிற்றில் சிக்கி துன்பம் மிக கொண்டிருந்தேன். அப்போது,  நின் பாதமாகிய தாமரை மலரை என் தலைமேல் நீயாகவே (நான் கூப்பிடாமலேயே) வைத்து என்னை ஆண்டுகொண்டாய். அப்படிப்பட்ட நின் நேசத்தை நான் என்ன என்று சொல்வது?

பாடல் (ராகம்: ரஞ்சனி, தாளம்: ----விருத்தம்----) கேட்க

Previous Next

نموذج الاتصال