பலன்: தலைமை பதவி கிடைக்கும்
வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியா பரமானந்தர், பாரில் உன்னை
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே.
பொருள்:
என் அன்னை அபிராமியே, தேவர்கள், அசுரர்கள் மற்றும் உன் அடியார்கள் உன்னை வணங்குகின்றனர்.
நல்திசைமுகர் - 4 திசைகளிலும் முகம் உள்ளவர் - நான்முகர் - பிரம்மா.
நாரணர் - நாராயணன் - விஷ்ணு
பிரம்மா, விஷ்ணு இவர்கள் இருவரும் எப்போதும் அபிராமி அன்னையை நினைதுக்கொண்டிருக்கிறார்கள்.
அன்னையை தன் மனத்தின் உள்ளேயே கட்டுப்படுத்தியவர், என்றும் அழியா ஆனந்தமே வடிவான பரமசிவன்.
இவர்களை காட்டிலும் அன்னையே, நீ பாரில் உன்னை கோவிலில் தரிசனம் செய்வோர்க்கு எளிதாய் அருள் புரிகிறாய். உனது உள்ளத்தை எப்படி புகழ்வது?
பாடல் (ராகம் - ஹிந்தோளம், தாளம் - கண்ட சாபு) கேட்க