சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, 9-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் சேவை நடைமுறைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு, நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இணையதளம் மற்றும் செல்போன் ஆப் மூலமாக பயணிகள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்தனர். அதன்படி, முன்பதிவு தொடங்கிய 30 முதல் 40 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல, சென்னையில் இருந்து 5 மணி 50 நிமிடங்களில் கோவைக்கு செல்ல முடியும். இதில், குளிர்சாதன முதல்நிலை இருக்கை டிக்கெட் கட்டணம் ரூ.2,310 ஆகவும், 2-ம் நிலை இருக்கை கட்டணம் ரூ.1,215 ஆக வசூலிக்கப்பட்டு உள்ளது. உணவின்றி டிக்கெட் கட்டணம் முதல்நிலை இருக்கைக்கு ரூ.2,116 ஆகவும், 2-ம் நிலை இருக்கைக்கு ரூ.1,057 ஆகவும் வசூலிக்கப்பட்டது. இதேபோல, குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் 450 இரண்டாம் நிலை இருக்கைகளும், 56 முதல்நிலை இருக்கைகளும் உள்ளது. மொத்தம் 8 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found