தமிழ் மக்களுக்காக உழைக்கும் உத்தம தலைவர் ஸ்டாலின் -ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. ஆனதும் முதல் கூட்டத்தில் பேசியதாவது: இன்று முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலினை குழந்தை பருவத்தில் இருந்தே அறிவேன். அவரை பார்க்கும் போது பிரமாண்டமாக தெரிகிறார். வயதில் என்னை விட சிறியவராக இருந்தாலும் என்னைவிட தியாகத்திலும், உழைப்பிலும் பெரியவர். தமிழ் மக்களுக்காக உழைக்கும் உத்தம தலைவர். மக்களிடம் இருந்து தி.மு.க.வை பிரிக்க முடியாது என்பதால் டெல்லி சர்க்கார் இடையூறு செய்ய நினைக்கிறது. மக்களை ஏமாற்றுவதற்காக இரண்டு பேரை அனுப்பி இருக்கிறார்கள். ஒருவர் கவர்னர் ரவி. இன்னொரு வர் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை. அவர்களுக்கு மக்களே பாடம் புகட்டுவார்கள்.

Previous Next

نموذج الاتصال