ஐகோர்ட்டு தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க. கொண்டாட்டம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்டு அளித்த தீர்ப்பை வரவேற்று முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.அ.தி.மு.க. நிர்வாகிகள் கஜேந்திரன், பழனிசாமி, உதயசூரியன், செல்வம், மோகன், முருகேசன், விஸ்வநாதன், அந்துவான், கண்ணன், தனலட்சுமி, ஜமுனா, மண்ணாங்கட்டி, முனியாண்டி, வாசு, வினோத்குமார், எத்திராஜ், முரளிதரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Previous Next

نموذج الاتصال