சென்னையில் விநாயகர் சதுர்த்திவிழா 31- ந்தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் விநாயகர் சிலைகளை பூஜை செய்து வழிபட்டனர். சென்னையில் வீடுகளில் பூஜை செய்த விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கடலில் கரைப்பதற்காக சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய இடங்களுக்கு எடுத்து செல்கிறார்கள். இன்று 2-வது நாளாக சிறிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கரைத்து விட்டு சென்றனர். நாளை (சனி) ,ஞாயிற்றுக்கிழமைகளில் கடலில் பெரிய விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. இந்த நிலையில் வீடுகளில் பூஜை செய்து வழிபட்ட சிறிய வகை களிமண் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க செல்ல முடியாதவர்கள் தங்களது வீடுகளின் அருகில் உள்ள கோவில் வளாகத்தில் மற்றும் மரத்தடி பகுதிகளில் விட்டு செல்கிறார்கள். சென்னையில் உள்ள பெரும்பாலான கோவில் வளாக மரத்தடி பகுதிகள் முழுவதும் விநாயகர் சிலைகள் நிறைந்து காணப்பட்டு வருகின்றன. இந்த விநாயகர் சிலைகளை கோவில் நிர்வாகத்தினர் மொத்தமாக சேகரித்து லாரிகள் மூலம் ஏற்றி சென்று கடலில் கரைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- தமிழ்நாடு
- _மத்திய
- __சென்னை
- __செங்கல்பட்டு
- __காஞ்சிபுரம்
- __கள்ளக்குறிச்சி
- __திருவள்ளூர்
- __திருவண்ணாமலை
- __விழுப்புரம்
- _கிழக்கு
- __கன்னியாகுமரி
- __புதுக்கோட்டை
- __இராமநாதபுரம்
- __தூத்துக்குடி
- __திருநெல்வேலி
- __தென்காசி
- __சிவகங்கை
- __விருதுநகர்
- _வடக்கு
- __அரியலூர்
- __கடலூர்
- __பெரம்பலூர்
- __மயிலாடுதுறை
- __நாகப்பட்டினம்
- __திருச்சிராப்பள்ளி
- __தஞ்சாவூர்
- __திருவாரூர்
- _தெற்கு
- __திண்டுக்கல்
- __கரூர்
- __மதுரை
- __கோயம்புத்தூர்
- __நாமக்கல்
- __திருப்பூர்
- __தேனி
- _மேற்கு
- __தர்மபுரி
- __ஈரோடு
- __கிருஷ்ணகிரி
- __நீலகிரி
- __இராணிப்பேட்டை
- __சேலம்
- __திருப்பத்தூர்
- __வேலூர்
- ஆன்மீகம்
- பெண்கள் உலகம்
- இ பேப்பர் / புத்தகம்
- _மக்கள் ரிப்போர்ட்
No results found